Skip to main content

என் முதல் கச்சேரி அனுபவம் - மயிலாப்பூர் சென்னை

நான் முதன் முதலா கர்நாடக சங்கீத கச்சேரிக்கு போனது அன்னக்கித்தான். அதுவரை சிலபல கச்சேரிகளை என் வீட்டு பக்கத்தில் இருக்கற விநாயகர் கோவிலில் நடக்கற லட்சர்ச்சனையின்போது கேட்டிருக்கேன். அப்போ எனக்கு தெரிஞ்சதெல்லாம் நம்ம கணபதி அவருடைய வாய் பாட்டும் , மிருதங்கம் ஸ்ரீதருடைய (இவருடைய தலைக்கு அப்புறம் அவரோட கருப்பு கலர் ஹீரோ ஹோண்டா சீடி 100 பைக் தான் ஞபகதுக்கு வரும்) மிருதங்கமும் தான். நிற்க.

T.M கிருஷ்ணா 'கார்த்திகேயா காங்கேயா' ன்னு பாட, காரைக்குடி மணி அவர்கள் மிருதங்கம் வாசிக்க , நான், விசா,சஞ்சீவ் அண்ணா, முத்து அண்ணான்னு ஒரு கூட்டமே உக்காந்து ரசிக்க கச்சேரி பலமா தான் போயிட்டிருந்தது.நம்ம முத்து அண்ணா, சஞ்சீவ் அண்ணா ரெண்டு பேரும் காலையில் இருந்து இன்னக்கி தலைவர் வசிக்கிறார் ன்னு ஒரே பில்ட்அப். நானும் யார்ரா அந்த தலை ன்னு பாத்த அது காரைக்குடி மணி தான். இவங்க ரெண்டு பேரும் மிருதங்கம் கத்துக்கிட்டதாலதான் இவரை இவங்க தலை ன்னு சொல்லறாங்கன்னு எனக்கு பிடி கிடச்சுது.

கட்சேரி சூடு பிடிக்க ஆரம்பிச்சது அங்க உட்கார்திருந்த எல்லாரும் கையாலும், காலாலும் தாளம் போடறத பாத்தப்போவே என்னால உணர முடிஞ்சது. நான் என் அண்ணன் விஸ்வநாதன பார்த்தேன், அவன் 'திரு திருன்னு' முழிசிட்டிருந்தான். வந்திருந்த அத்தனை பேரும் தாளம் போடறத பாத்தப்போ எனக்கு உள்ளூர ஒரு பயம்; 'எங்க நம்மள இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கிடுவாங்களோன்னு '. நானும் தாளம் போட ஆரம்பிச்சேன். அப்போ என் பக்கத்தில இருந்த ஒரு மாமா ( கட்சேரிக்கு வந்தாலே default ஆ அவரு மாமா தான் எனக்கு ஒரு எண்ணம்.) தாளம் போட்டுக்கொண்டே என்ன பாத்தார். நான் தாளம் போடறத கவனித்த அவர் ஒரு சின்ன புன்னகையுடன் கட்சேரியை ரசிக்க ஆரம்பிச்சார். எனக்கு உள்ளூர ஒரு நிம்மதி (இந்த சமூகம் என்ன அங்கீ கரிச்தை நினைத்து). இப்படி என்னோட முதல் கச்சேரி முடிஞ்சது.

Comments

Post a Comment

Popular posts from this blog

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)   

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...