சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான்.
ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க.
நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள் குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும்.
நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும் ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும்.
இதிலென்ன ஆச்சர்யம் வேண்டியிருக்கு !!!
சரி இப்போ டக்குன்னு ஒரு நான்-ஸ்மார்ட் போன் சொல்லுங்க பாப்போம் !! ஆமாம் இப்போ இருக்கிற "ஐபோன் 4s" க்கு பதிலா நல்ல பழைய போன் ஒன்னு தேடிக்கொண்டு இருக்கிறேன். என்ன அவ்வப்போது ஸ்கோர் பாக்க முடியாது. ஆனால் என் போனிடம் செலவிட்ட நேரமானது இனி நான் புத்தகங்கள் படிக்க அல்லது தோட்ட வேலை செய்ய உபயோகமாகுமே. உணர்வுகளற்ற வெறும் தட்டையான, நமது வாழ்வியலுடன் எவ்விதத்திலும் ஒத்துப்போக அருகதையற்ற ஒரு பொருளுக்கு பதில் காகிதங்களை, ஏன் நம்முடைய மண்ணை வருடுவதர்காக. மகிழ்ச்சி .
ஆனா ஒன்னு சாமி - கட்டை விரலும் , ஆட்காட்டி விரலும் உனக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்தும்டியோ !!!
வாட்டவர் இட் இஸ் , ஐ ஆம் "வெறி" மச் பார் நான் - ஸ்மார்ட்போன்.
Comments
Post a Comment