Skip to main content

Posts

Showing posts from June, 2010

சம்மர் கேம்ப்

சம்மர் கேம்ப் என்ற வார்த்தை எல்லா பெற்றோர் மற்றும் குழந்தைகள் சகஜமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் நான் என்னுடைய சம்மர் கேம்ப் என்னவாயிருக்கும்னு யோசிச்சதுல வந்தது தான் இங்கு நான் எழுதியிருப்பது. என்னுடைய சின்ன வயசில பள்ளி விடுமுறை நாட்களை எப்படி செலவிட்டேன்னு யோசிச்சா ரொம்ப மகிழ்ச்சியான பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வருது. லீவ் நாட்கள்ல காலைல எழுந்து சாப்பிட்டு முடிச்சு வெளிய வந்த திரும்ப அடுத்ததா எப்போ பசிக்கிதோ அப்போதான் வீட்டைப்பத்தி நினைப்பேன். முதல்ல வீட்டு முன்னாடி இருக்கிற புளிய மரத்தடியில் கிரிக்கெட் விளையாடணும், அது முடிஞ்சா இருக்கவே இருக்கு G.D. வாட்டர் டேங்க். G.D. வாட்டர் டேங்க் மேல ஒவ்வொரு படியா ஏறி உச்சியில போய் உக்காந்து அரட்டை அடிக்கறது , புளியங்காய் சாப்பிடறது, டேங்க் வாட்ச்மேன் காளிமுத்து @ செந்திலுக்கு தெரியாம ஏறி விளயடரதுல ஒரு த்ரில். அது போதாதுன்னு பக்கத்திலுள்ள G.D. மெடிக்கல்ஸ் ஹாஸ்பிட்டல் காம்பௌண்டுகுள்ள ஓடிப்பிடிச்சு விளயாடறதும், இடையில் தண்ணி தாகம் எடுத்தா காம்பௌண்டு வழியா வந்து ரோட்டுமேல இருக்கற உப்புத்தண்ணி குழாயில ஸ்வயின் ப்ளு அது இதுன்னு எந்த...

சே குவேரா – ஓர் யதார்த்தவாதி

சே பிடெல் காஸ்ட்ரோவிற்கு எழுதிய கடிதத்தில், “ என்னுடைய மனைவிக்கும் , குழந்தைகளுக்கும் எதையும் விட்டுசெல்லவில்லை என்று எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. வாழ்வதற்கு தேவையானவற்றையும், கல்வியையும் கொடுப்பதற்குமான ஓர் அரசு இருக்கிறது . நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம் ”. சே தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், “ தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என நம்புகிறேன். மக்களின் துன்பங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வருமயையும் கண்டு நம்மைப்போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என நம்புகிறேன். எனது அன்பிற்குரிய மனிதர்களை, உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப்படுகிறேன். ஆனால் பிற நாடுகளில் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் எதிரியோடு போரிடப்போகிறேன் என்பது வேதனையை குறைக்கிறது. “ சே தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில், “ என்னைப்பற்றி உங்களுக்கு அதிகம் நினைவிருக்காது. உங்கள் தந்தை தனது நம்பிக்கைகளுக்கு உண்மையாக செயல்படுபவன். தனது தத்துவத்திற்கு விசுவாசமானவன். நீங்கள் நல்ல புரட்சிக்காரர்...

ஜெனரேஷன் நெக்ஸ்ட்

மனிதனின் உள்மனதில் உள்ள மிருகதனத்தை வெளியேற்ற ஒரு வடிகால் தேவைபடுகிறது. இந்த சமூகம் அத்தகைய க்ரூரதனத்தை நளினமாக , நாசூக்காக வெளியேற்ற பலவிதமான வழிகளை கொடுத்திருக்கிறது. நம் சமுதாயம் கபடி, ஜல்லிக்கட்டு போன்ற வீர விளயட்டினையும், உலக சமுதாயம் ரக்பி, கால்பந்து போன்ற விளயட்டினை மனிதன் தன் ஆக்ரோஷத்தினை வெளியேற்ற ஒரு வடிகாலாக கொடுத்திருக்கிறது. இக்காலத்தில் வளர்ந்து வரும் தலைமுறையினர் தங்களுக்குள் அடங்கி கிடக்கின்ற இத்தகைய குரூரத்தை வெளிப்படுத்த இயலாமல், வெளிப்படுத்த போதுமான அளவு நேரமில்லாமல் தங்களுக்குள்ளேயே பூட்டிவைதுக்கொள்கின்றனர். இதனால் இளைய தலைமுறையினர் இவ்வேன்னங்களை வெளிப்படுத்த கொடூரமான காட்சிகளை தொலைகாட்சியில் பார்ப்பதும், கொடூரமான செயல்களை செய்திடவும் நேரிடுகிறது. இந்த நிலைக்கு இன்றைய சமுதாய மாற்றம் ஒரு முக்கிய காரணம் என்பது சிறிது வேதனையளிக்கிறது. வரும் தலைமுறையினர் வெளியே சென்று தனது எண்ணங்களை , ஆக்ரோஷத்தினை வெளிப்படுத்த பயன்படும் விளையாட்டுக்களை விளையாட போதுமான நேரமோ, இடமோ, சந்தர்ப்பமோ கிடைக்காமல் திணறுவது நாளைய உலகிற்கு எந்தவிதத்திலும் பயனளிக்காது என்பது அப்பட்டமான உண்மை.

கச்சேரி அனுபவம் – பாகம் 2 – தியாகராயநகர் சென்னை

ஞாயிற்றுகிழமை காலங்காத்தால எழுந்து நான்,விஸ்வாஸ்,சஞ்ஜீவ் அண்ணா எல்லாருமா சேர்நது சென்னை தியாகராயநகர் Krishna காண சாபாவில் நடந்த சுதா ரகுநாதன் கச்சேரிக்கு போனோம். கச்சேரி ஆரம்பித்து கொஞ்ச நேரம் ஆயிருந்தது. நாங்க எங்க இருக்கைகளை தேடி உட்காரும்போது எல்லாரும் “ ஏம்ப்ப கொஞ்சம் சீக்கிரமா வந்து தொலைக்ககூடாதான்னு “ எங்களை மனசுக்குள்ள திட்டினது எங்களுக்கு கேட்காமல் இல்லை. தனி ஆவர்த்தனம் முடிஞ்சவுடன் மிருதங்க வித்வான் மிருதங்கத்தை செங்குத்த நிக்க வெச்சு லேசா ஒவ்வொரு ஓரத்திலும் தட்டிப்பார்த்து உதட்டை பிதுக்கி கொண்டார். அதை பார்த்தபோது எனக்கு டெண்டுல்கர் பந்தை தூக்கி அடிச்சு கேட்ச் கொடுத்தபின் பேட்ட்டின் அடிப்பாகத்தை பார்த்து "ச்சே!! பாட்டம் எட்ஜ்” ன்னு உதட்டை பிதுக்கரதுதான் ஞாபகத்தில் வந்துது. கச்சேரி முடிஞ்சு வெளியே வந்தவுடனே ஒரு மாமி எ ன்னை பார்த்து “இந்த காலத்துல என் வீட்ல உள்ள உன் வயசுப்பசங்க எல்லாம் சங்கீதம் கேக்கசொன்ன முடியாதுன்னு சொல்றாங்க, ஆனா நீ ரொம்ப ஆர்வத்தோட வந்திருக்கரத பார்த்த எனக்கு சந்தோஷமா இருக்கு” என்றார். ம்ம்!! எனக்கு தான் தெரியும் என் ஆர்வமும் என் இசைஅறிவும் என்...