ஞாயிற்றுகிழமை காலங்காத்தால எழுந்து நான்,விஸ்வாஸ்,சஞ்ஜீவ் அண்ணா எல்லாருமா சேர்நது சென்னை தியாகராயநகர் Krishna காண சாபாவில் நடந்த சுதா ரகுநாதன் கச்சேரிக்கு போனோம்.கச்சேரி ஆரம்பித்து கொஞ்ச நேரம் ஆயிருந்தது. நாங்க எங்க இருக்கைகளை தேடி உட்காரும்போது எல்லாரும் “ஏம்ப்ப கொஞ்சம் சீக்கிரமா வந்து தொலைக்ககூடாதான்னு“ எங்களை மனசுக்குள்ள திட்டினது எங்களுக்கு கேட்காமல் இல்லை.
தனி ஆவர்த்தனம் முடிஞ்சவுடன் மிருதங்க வித்வான் மிருதங்கத்தை செங்குத்த நிக்க வெச்சு லேசா ஒவ்வொரு ஓரத்திலும் தட்டிப்பார்த்து உதட்டை பிதுக்கி கொண்டார். அதை பார்த்தபோது எனக்கு டெண்டுல்கர் பந்தை தூக்கி அடிச்சு கேட்ச் கொடுத்தபின் பேட்ட்டின் அடிப்பாகத்தை பார்த்து "ச்சே!! பாட்டம் எட்ஜ்” ன்னு உதட்டை பிதுக்கரதுதான் ஞாபகத்தில் வந்துது.
கச்சேரி முடிஞ்சு வெளியே வந்தவுடனே ஒரு மாமி என்னை பார்த்து “இந்த காலத்துல என் வீட்ல உள்ள உன் வயசுப்பசங்க எல்லாம் சங்கீதம் கேக்கசொன்ன முடியாதுன்னு சொல்றாங்க, ஆனா நீ ரொம்ப ஆர்வத்தோட வந்திருக்கரத பார்த்த எனக்கு சந்தோஷமா இருக்கு” என்றார். ம்ம்!! எனக்கு தான் தெரியும் என் ஆர்வமும் என் இசைஅறிவும் என்னன்னு.
Comments
Post a Comment