Skip to main content

ட்ராவல் - மை டேக்




பயணம்  - 

நம்முடைய உள் உணர்ச்சிகளை குறித்தும், நம் பலம் மற்றும் பலவீனங்களைக் குறித்தும்நம்முடைய சமூக கண்ணோட்டத்தினை குறித்தும், சக மனிதர்களைக் குறித்தும், இன்ன பல இயல்புகளைக் குறித்தும் நாம் அறிந்து கொள்ள, நம்மால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, யாராலும் ஆக்கிரமித்துக்கொள்ள இயலாதநமக்கே நமக்கான தருணம்.

எனக்கு பயணித்தல் என்பது பிடித்தமான, மனதிற்கு ஒருவித மகிழ்வை தரக்கூடிய நல்லதொரு அனுபவமாகவே இருந்த வந்துள்ளது. ஆனால் ஒரு பயணத்திற்காக என்னைத் தயார்படுத்திக் கொள்வதும் , அதற்குத் தேவையான ஒரு முன்னேர்பாட்டினை செய்வதும்தான் எனக்கு சிறிதும் அறிவிற்கு எட்டாததாகவும், மனதிற்கு தொய்வு தரக்கூடியாதகவும் இருக்கின்றது . மற்றபடி பயணம் என்பது ஆழ்ந்த தியானத்தில் என்னை ஆட்படுதிக்கொள்வதர்க்கு இணையான ஒரு சிறந்த நிகழ்வாகவே இருக்கும்.

ஒரு சிறந்த அனுபவத்தை நமக்கு அறிமுகப்படுத்துவதனாலேயோ, வாழ்விற்கு தேவையானதொரு பாடத்தை நம்மை அறியாமலேயே நமக்குப் புகட்டுவதனாலேயோ ,வாழ்வில் நாம் சந்திக்கவேண்டிய, நாம் காணவேண்டிய சிலவற்றை நமக்கு கிடைக்கச்செய்வதனாலேயோ,இன்ன பிறவற்றாலோ பயணித்தலை ஒரு தனித்துவம் வாய்ந்த உணர்வாகவே நான் காண்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் பயண நேரம் முழுவதும் ஒருவித சீரான மனநிலையும்,  அபரிமிதமான மன நிம்மதியும், இந்த சமய விரயமானது வேரேதும் செய்ய இயலாத, வெரெதர்க்கும் பயன்படுத்த முடியாத, எனக்கே எனக்கான தருணமாகவே  நான் கருதுகிறேன். ஒவ்வொரு நொடிப்பொழுதும் நான் எனக்குப் பிடித்தவற்றை பற்றி சிந்திக்கவும் , வேண்டியவற்றை கண்டு இன்புறவும், பிறரது ஆக்கிரமிப்புகளில் இருந்து என் மனம் நீங்கி இருத்தலாலும் நான் இத்தகைய பயண நேரத்தினை பெரிதும் விரும்புகிறேன்.

ஒவ்வொரு பயணத்தின்போதும் எனக்கு ஏற்படுகின்ற அனுபவம் வேரொருவர்க்கும் வாய்க்காதது என்ற பிரமிப்பும், எனக்கு ஏற்படுகின்ற மனத்தெளிவும், எண்ணச்சிதரல்களும், பலவற்றை காண்பதற்கும், சிலவற்றைத் தவிர்பதர்க்கும், பலருடைய தொடர்பிற்கும் , பலவித கருத்துப் 
பரிமாறுதலுக்கும் , ஒரு சில உணர்வுகளுக்கும் , இப்படி பலவற்றினாலும், பயணிப்பது ஒரு 
தனித்துவம் வாய்ந்த, வாழ்வில் மறுக்க முடியாத /  மறக்க முடியாத வாய்ப்பாகவே அமையும்.





Comments

Popular posts from this blog

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)   

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...