Skip to main content

என் முதல் சிக்ஸர்

வேன்யு : போத்தனூர் G.D. டேங்க் செட்டியார் வீட்டு புளியமரத்தடி
பவுலர் : சந்துரு
பேட்ஸ்மேன் : விக்னேஷ்
பௌண்டரி : தண்ணி பைப் காம்பவுண்டு சுவர் – 4 ரன், அசோக மாமா ஆட்டுசாலை – 2 granted,ருக்கு வீட்டு சுவர் - 2 granted.

எனக்கு நினைவுதெரிஞ்சு சுமார் எட்டு வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு கிரிக்கெட்டப்பத்தி அவ்வளவா தெரியாதுன்னாலும் வீட்ல விஸ்வாஸ், பாலு, கண்ணன் அண்ணா , சஞ்ஜீவ் அண்ணா எல்லரோடையும் போய் விளையாடுவேன். அப்படி விளயாடிட்டிருந்த எனக்கு கிரிக்கெட்ல ஆர்வம் வரதுக்கு காரணமா இருந்தவர்கள் ரெண்டு பேர். ஒருத்தர் வெஸ்ட்இண்டீஸின் ப்ரையன் லாரா, இன்னொருத்தர் வீட்டு பக்கத்தில் இருந்த ஜெயராம் போஸ்ட்மாஸ்டர். போஸ்ட்மாஸ்டர் எப்பவுமே என்ன ஸ்ரீகாந்த்’ன்னு தான் கூப்பிடுவார். சும்மா நான் பேட்டை வச்சு டொக், டொக்ன்னு தட்டினா உடனே பலே ஸ்ரீகாந்த்ன்னு சொல்லுவார்.(இப்படி இவரு உசுப்பேத்தி விட்டு உசுப்பேத்தி விட்டே உடம்ப ரணகளமகிட்டார்) .

நாங்க எல்லாம் சேர்ந்து விளையாடுவது வீட்டுக்கு எதிரே உள்ள புளிய மரத்தடியில் தான்.நான், விஸ்வாஸ்,பாலன், கண்ணன் அண்ணா, சஞ்ஜீவ் அண்ணான்னு எங்க வீட்டிலேயே ஒரு டீம் இருக்கும். நான் விளையாட ஆரம்பிச்ச நாட்கள்ல என்னுடைய வீட்டிலேயே எனக்கு நிறைய கோச் இருந்தார்கள். இப்பிடி ஆடு அப்படி ஆடுன்னு ஆளாளுக்கு டிப்ஸ் கொடுத்து என்னை மெருகேற்றி இன்னக்கி இந்த நிலைமைக்கி ஆளாக்கி இருக்கிறார்கள். எங்களுடைய ஹோம் கிரௌண்டான புளியமரத்தடியில் விளையாட அவ்வப்போது வெளியிலிருந்தும் “like a short county stinct” ஆட்கள் வந்ததுண்டு. அவர்களில் அப்பநாயக்கம்பட்டி சந்துரு, பக்கத்துக்கு காம்பவுண்ட் சாய், கண்ணன் அண்ணாவின் ஒரு சில நண்பர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

அந்த காலத்தில் எங்களுக்கென்று கிரிக்கெட் கிட் கிடையாது. போத்தனூர் பஞ்சாயத்து ஆபீஸ் பின்னாடி உள்ள பெரியசாமியின் விறகு கடையிலிருந்து சட்டையில்லாத தாத்தா கை வண்டியில் வைத்து கொண்டு வரும் சவுக்கு கட்டைகள்தான் எங்களுடைய ஸ்டம்ப். அந்த சவுக்கு கட்டையின் இடையிடையே கருப்பு நிறத்தில் வட்டமாக இருக்கும் கனுக்கள்தாம் எங்களுடைய ஸ்டம்ப் காம் (stump camera). பேட்டும் அது போலவே ஏதாவது ஒரு மரத்திலான பலகை தான். டாஸ் போட எங்களிடம் காயின் கிடையாது. ஒரு சின்ன தட்டையான ஓட்டு துண்டில் செடியை பிடுங்கி தேய்த்து பச்சை நிறத்திலாக்கி ஒரு பக்கம் சிவப்பு மறுபக்கம் பச்சைன்னு டாஸ் போடுவோம்.

எங்களுடைய கிரிக்கெட்டில் சில ஸ்பெஷல் ரூல்ஸ் உண்டு. பவுலர் சைடில் உள்ள இடத்தில் ஸ்டம்ப்க்கு பதில் ஒரு சின்ன கல். ரன் அவுட் செய்யும் போது பவுலர் கால கல்லுமேல வச்சு கனெக்ஷன்ன்னு அவுட் பண்ணனும், அது போக நாயக்கர் வீட்டு சுவற்றில் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல புல்டாஸ்ஸா பந்து பட்டா அவுட், வீட்டு காம்பவுண்ட் தாண்டி புல்டாஸ்ஸா பந்து போனா அவுட், அசோக மாமா ஆட்டுசாலையின் மேல மூனு தடவைக்கு மேல் பந்த அடிச்சா அவுட்ன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. இதுபோக கொஞ்சம் ஏமாந்தவன் கிடைச்ச விஸ்வாஸ் மாதிரி ஆளுங்க புதுசு புதுசா பல “Instant Rules” உருவாக்கினதும் உண்டு.

கண்ணன் அண்ணாவோட ஸ்பெஷாலிட்டியே அவரோட “Solid Defence” தான். தமிழ்ல கட்டை போடறதுன்னு சொல்லுவோம். அப்படியே straight bat’ ட்ல தரயப்பாத்து நேர்த்திய பந்தை அமுக்கவது அவரோட ஸ்டைல். கிட்டத்தட்ட Dravid’s defence. சஞ்ஜீவ் அண்ணா அப்படியே பந்தை மடக்கி அடிக்கறதுல வல்லவர். விஸ்வாஸ் அவ்வப்போது சில நல்ல ஷாட்ஸ் ஆடினாலும் அவன் கட்டை போட்டு கழுத்தறுப்பான். இவன் போடற கட்டைக்கு தமிழ்ல மரண கட்டை, தர்ம கட்டைன்னு சொல்லுவோம். முடிஞ்சவரை ஒன்னு ரெண்டு தடவை அவுட் ஆகியும் ஏமாத்தி காஜ் வாங்குவான்.

பாலுவோட கிரிக்கெட் ஸ்கில் பத்தி சொல்லனும்னா ரொம்ப சிம்பிள். ரெண்டு கால்களையும் அகற்றி வைத்துக்கொண்டு பேட்டை நல்லா வீசு வீசுன்னு வீசுவான். கிட்டத்தட்ட நம்ம ஜவகல் ஸ்ரீநாத் மாதிரியே. பவுலிங்கும் ஸ்ரீநாத் மாதிரியே எல்லாரையும் ஒரு பக்கம் பீல்டிங் நிக்க வச்சு மற்றொரு பக்கம் பந்த எறியறதும், “Full Toss” ஆ பேட்ஸ்மேன் தலைக்குமேலால “Wicket” மேல பந்து எறியறதும் ஒரு ஸ்பெஷாலிட்டி. விஸ்வாஸ் பல தடவை இந்த மாதிரி தலைக்கு மேல் வர்ற புல்டாஸ் பால்ல அவுட் ஆகி அழுதது இன்னும் எனக்கு நினைவிருக்கு.

“Am very fortunate to play along with Sachin” ன்னு Shewag சொல்ற மாதிரி இவங்கள போல ஜாம்பவான்கள் கூட கிரிக்கெட் விளையாடினது எனக்கு பெருமைதான் (ஹி ஹி...).

Comments

Popular posts from this blog

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)   

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...