Skip to main content

ஆதவனின் அறிமுகம்



" பிறர் நம்மிடம் எந்த வேஷத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதையறிந்து அதை அணிவதால் வாழ்கையின் கட்டங்கள் சுமுகமாக கழிகின்றன. என்றாலும் புழுக்கம் தாங்காமல் வேஷங்களை எதிர்த்து திமிறத் தொடங்கும் சந்தர்ப்பங்களும் வருகின்றன. அப்போது சண்டை வருகிறது..."

தற்பொழுது  ஆதவன் அவர்களுடைய சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய அண்ணன் "கண்ணன்" மூலமாக ஆதவன் அறிமுகமானார். ஏன் முக்கால்வாசி எழுத்தாளர்கள் , புத்தகங்கள் எனக்கு அறிமுகபடுதப்பட்டது அவராலே என்று கூட சொல்லலாம்.

நாங்கள் இருவரும் புத்தகங்கள் படிப்பது, பிறகு அவற்றைக் குறித்து ஒரு அழகிய மாலை வேளையில் , வீட்டின் பால்கனியில் நன்றாக கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு, கோத்தாஸ் காபியின் அரோமாவில் மிதந்து கொண்டு கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வோம். பல புதிய எழுத்தாளர்கள் குறித்தும் அவர்களுடைய நேர்த்தி குறித்தும் அளவளாவிக் கொண்டிருப்போம்.

யாரோ கூப்பிடும் சத்தம். கண்விழித்தேன்.

அவரின்பால் இருந்த பயம் காரணமாகவோ இல்லை இறுக்கம் காரணமாகவோ தெரியவில்லை நான் அவரிடம் என் படிப்பு மற்றும் வேலை தவிர வேறேதும் குறித்து விவாதித்ததில்லை. என் பயம் மறைந்து , இறுக்கம் தளர்வதர்க்குள் அவர் பரதேசி ஆகிவிட்டார். ஆம் நான் மேற்கூறிய ஒன்று வெறும் எழுத்து வடிவத்துடனே நின்றுவிட்டது தான் உண்மை. நிற்க.

சில வருடங்களுக்கு முன்பு ஆதவன் அவர்களுடைய "காகிதமலர்கள்" புத்தகத்தை குறித்து எழுதியிருந்தேன். அவருடைய இன்னொரு புத்தகமான "என் பெயர் ராமசேஷன்" னும் கண்ணன் அண்ணாவின் மூலமாக படிக்கும் வாய்ப்பைப்பெற்றேன். அவருடைய காகிதமலர்கள் என்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

இந்த வருடம் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடந்தபொழுது அவரின் மற்ற சில படைப்புகளை தேடிப்பிடித்து வீட்டில் அகப்படுத்த முனைந்தேன். ஆனால் அவருடைய சிறுகதை தொகுப்பு மட்டுமே அகப்பட்டது. கடந்த வாரம் அவரின் "இரவிற்கு பின் வருவது மாலை" புத்தகம் அமேசான் வலைதளத்தில் இருந்து ஆர்டர் செய்து கிடைக்கப்பெற்றேன்.

தற்சமயம் "நான் பர்ஸ் திருடிய நாள்" படித்துக் கொண்டிருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)   

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...