Skip to main content

அடிமை , சலிப்பு - இது தான் நான்


நான் ஆதவன் அவர்களின் எழுத்துக்களால் பெரிதும் கவரப்பட்டு சிலகாலம் ஆகிவிட்டது. அவரின் எழுத்து நடை, அணுகுமுறைசொல்லும் விதம் , உவமைகள், எக்ஸ்ப்ரெசென்ஸ் மற்றும் இந்த சமூக கட்டமைப்பின் மீதுள்ள அவரின் பார்வை, அவரின் கதாபாத்திர சிருஷ்டி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

அவரின் படைப்புகள் முற்றிலும் மனிதர்கள் குறித்தும், மனிதர்களின் உள்ளுணர்வுகள் குறித்தும், மனித மனங்களில் எழும் சுய கேள்விகள், சமூக கட்டமைப்பு, அவற்றின்பால் நம்முடைய சலிப்பு முதலியனவற்றைக் குறித்தும் தான். அவரின் கதாபாத்திரங்கள்  எதையும் சட்டென்று ஊகிக்காமல் , பல கேள்விகளுக்கு தம்மை உள்ளக்கி கொள்ளுவதும், அவற்றில் காணப்படும் ஒரு வித நிதானம் அவருடைய எழுத்திலும் பிரதிபலிக்கும்.

டில்லி, அரசு வேலை , மிடில் கிளாஸ், சமூகம் , அதற்காக நாம் அணியும் பலவித வேஷம், எல்லாவற்றிலும் உள்ள சலிப்பு , நாம் நமக்காக அல்லாமல்  பிறர்க்காக என்பதை நம்மில் திணிக்கும் இந்த அமைப்பு ஆகியனவற்றின் ஆக்கிரமிப்பு பெருமளவில் தென்படும்.குறிப்பாக அவரின் எழுத்துக்கள், இந்த சமூக அமைப்புகளைக் குறித்த அவர் பார்வை , பெரிதும் இவ்வாறே அமைந்திருக்கும்.

" நாம் பயன்படுத்தப்படாமல் நம்மால் பயன்படுத்தக்கூடிய ஒரு அமைப்பையே நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம் ".

கவித்துவமோ , எதுகை மோனையோ , கிராமத்து காவியமோ , வறுமை , பசி , வஞ்சகம், மனித உறவுகள் குறித்தோ படிப்பதானால் , பெரும்பாலும் எனக்கு ஏற்படுவது ஒரு வித நோஸ்டால்ஜியா , ஒரு வித அபரிமிதமான உணர்ச்சியின் வெளிப்பாடு , ஒரு வித மனக்கிளர்ச்சி , மன அமைதி , ஒரு ஆத்மா திருப்தி அவ்வளவுதான். இவையனைத்தும் தற்காலிகமானவை. எளிதில் மறக்ககூடியவை.

ஆனால் ஆதவனின் எழுத்துக்கள் என்னை சிந்திக்க வைக்கிறது. மனதில் பல கேள்விகளை எழுப்புவதோடில்லாமல், என்னுள் , என்னால் அணியப்படுகின்ற பல வேஷங்களை , பலவித ஆடைகளை அவிழ்த்தெறிந்து என்னை நிர்வாணப்படுத்துகிறது. என்னை எனக்கே காட்டிக் கொடுக்கின்ற ஒரு கண்ணாடியாய் திகழ்கிறது.

நான் சார்ந்த சூழ்நிலைகளின் அடிமையாகவே என்னை நான் காண்கிறேன். என்னை பயன்படுத்திக்கொள்ளும் சமூகத்தின்பால் எனக்கு சலிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

Comments

Popular posts from this blog

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)   

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...